வள்ளியூர், தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான ஊர்களில் ஒன்று. தற்போது சிறப்பு நிலை பேருராட்சியாக விளங்கும் வள்ளியூர் விரைவில் நகராட்சி ஆவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் நெருங்கி வருகின்றன.வரலாற்று ரீதியாக தன்னகத்தே பல கதைகளை கொண்டிருக்கும் வள்ளி மாநகரம் வணிக ரீதியிலும் சுற்றியுள்ள பல கிராமங்களின் ஆதாரமாக விளங்குகின்றது. திருநெல்வேலிக்கும் நாகர்கோயிலுக்கும் இடையில் அமைந்த பெரிய ஊர் வள்ளியூர் என்று சொல்வதில் மிகை எதுவும் இல்லை. காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் வள்ளியூரை தினசரி கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
வடக்கு பக்கமாக 50 கிலோ மீட்டர் தூரத்தில் திருநெல்வேலியும் 30 கிலோ மீட்டர் தெற்கே கன்னியாகுமரியும் 30 கிலோ மீட்டர் தென்மேற்கில் நாகர்கோயில்